விபத்தில் இளம் பெண் பலி!!

483

ஹசலக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். மஹஸ்வெவ, இபலுவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நிரோஷினி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை – கண்டி பிரதானி வீதியில் மணல் போக்குவரத்தில் ஈடுபட்ட லொறி வண்டி சாரதி, லொறியை வீதியில் நிறுத்தி வைத்து விட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் வீதிக்கு அருகில் இருந்த லொறியின் பிரேக் விடுவிக்கப்பட்டு பின் பக்கமாக பயணிக்க ஆரம்பித்துள்ளது.

பின்னால் வந்த லொறி கடைக்கு வந்த இரண்டு பெண்கள் மீது மோதியுள்ள நிலையில் ஒரு பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த மற்ற பெண் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை மஹியங்கனை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.