நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்துள்ளது.
அதற்கமைய, சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று அடைமழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.






