
தங்க கட்டிகளை கடத்த முயற்சித்த இலங்கையர்கள் நால்வர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து புதுடில்லி நோக்கி பயணிக்க தயாராகவிருந்த இருவர் கைது செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது இவர்களிடமிருந்து ஒருதொகை தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் டுபாயிலிருந்து சென்னை நோக்கி பயணித்த மேலும் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 32 கிலோ கிராம் தங்கத்தின் பெறுமதி இந்திய ரூபாய்ப் படி 9.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




