வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் நடராஜானந்த வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டல்!

1546

ஓமந்தை இறம்பைக்குளம் நடராஜா வித்தியாலயத்தின் வகுப்பறை அடிக்கல் நாட்டல் வைபவம் 15.07.2017 நேற்று  பகல் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி  சந்திராவதி  தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் அவர்களும்  வவுனியா வடக்கு  வலய ஆசிரிய ஆலோசகர் பகிரதன் அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .

யாழ் கண்டி வீதியில்   ஓமந்தை  இராணுவ சோதனைச்சாவடி    அமைந்துள்ள பகுதியில் மிக நீண்டகாலமாக தற்காலிக கொட்டகையின் கீழ் இயங்கி வந்த மேற்படி பாடசாலைக்கு PSDG-2017  செயல்திட்டத்தின் கீழ் 60*25 என்னும் அளவுகொண்ட வகுப்பறை கட்டிடம்  அமைப்பதற்கான  நிதியொதுக்கீடு   கிடைக்கப் பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது .