இந்தியா-இலங்கை மோதிய 2011 உலக கிண்ண இறுதிப்போட்டில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தயார் என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை தோல்வி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்த நிலையில் 2011ம் ஆண்டில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேவும் தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறி சர்ச்சைய கிளப்பினார்.
இந்நிலையில், 2011 உலக கிண்ணத்தில் ஆட்டநிர்ணயம் என எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து யாராவது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், நான் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.






