வவுனியா தோனிக்கல் திருவருள்மிகு ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர திருவிழாவும் ஆடிச் செவ்வாய் பழமடையும் நாளை புதன்கிழமை (26.07.2017) காலை 08.30 மணியளவில் சக்தி ஹோமத்துடன் பூஜை ஆரம்பமாகி, அண்ணா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ அதிசய விநாயகப் பெருமாள் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு பால் அபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெறும்.
மாலை 05 மணியளவில் ஸ்ரீ அதிசய விநாயகப் பெருமாள் ஆலயத்தில் இருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டு அம்பிகையின் ஆடிப்பூர விழா இனிதே நடைபெறும்.
இப் பூஜைகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.