வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!!

538

 
வவுனியாவில் நேற்று பிற்பகல் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஜ.பி.செனரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,  வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலைமையில் செயற்படும் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் நேற்று பிற்பகல் 12 மணியளவில் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் 4பேர் சட்டவிரோத மரக்கடத்திலில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து சட்டவிரோதமாக கடத்தவிருந்த தேக்கு மரங்கள், வாகனம் உட்பட 4சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் குறித்த தேக்கு மரங்களை மொறட்டுவ பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவள்ளதாகவும் வவுனியா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி செனரத் தெரிவித்ததுடன் இந்நடவடிக்கையில் பி.சி. 39183 ஜானக, 87224 அசேல ஆகிய உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.