நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் சேர்ந்து வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்கள்.
அதில் கூறியிருப்பதாவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு வட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதில், விஷாலின் கை, கால்களை வெட்டுவோம் என்று கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெளியிட்டவர்களையும் தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் மனு மீது விசாரணை நடத்த சைபர் கிரைம் பொலிசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளன






