வவுனியாவில் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட 200பேருக்கு இன்று (29.07.2017) காலை 10 மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனினால் அவரது அலுவலகத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
20 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் முதலாம் கட்டமாக இன்று வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.













