வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்தும் புகை விசுறும்போது மூடப்படாத உணவகங்கள் மீது நடவடிக்கை!!

509

வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்தும் புகை விசுறும்போது அனைத்து உணவகங்களும் மூடப்படவேண்டும். இல்லையேல் அனைத்து உணவுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படும் என வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி லவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறப்பட்டு வருகின்றது. இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முதல் குறித்த பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தல் வழங்கப்படுகின்றது.

எனினும் அதனை அசட்டை செய்யும் உணவக உரிமையாளர்கள் உணவகங்களை திறந்து வியாபாரத்தில் இடுபடுவதுடன் சுகாதார திணைகளத்தின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே டெங்கை கட்டுப்படுத்தும் புகை விசுறும்போது உணவுப்பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனால் உணவகங்களை மூடாத உணவகங்களில் இருந்து உணவுப்பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.