மனைவியின் உடல் கிடைக்காத துயரத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர்!!

481

உயிரிழந்த தனது மனைவியின் உடலை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால், ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் மரத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவை, அபேபுரகம பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் மாவனெல்லையில் வசித்து வரும் உறவினர்களின் வீட்டுக்கு வந்திருந்த போது அயல் வீட்டில் உள்ள யுவதியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

யுவதியின் பெற்றோரும் உறவினர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்காத போதிலும் யுவதி தனது வீட்டில் இருந்து இருந்து வெளியேறி, திருமணம் செய்து கொண்டு பொலன்னறுவை, அபேபுரகமவில் இளைஞனின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதன் பின்னர் யுவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்று யுவதியை அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இருவரும் சட்ட ரீதியாக திருமணம் செய்துள்ளதால், அவர்களால் யுவதியை அழைத்துச் செல்ல முடியவில்லை.

சில வருடங்களுக்கு பின்னர் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதன் பின்னர் ஒன்றரை வருடங்களின் பின் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

இளைஞன் தனது மனைவியுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பும்போது பொலன்னறுவை இஸட் – டி ஆற்றில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு கூடியவர்கள் இளைஞனை காப்பாற்றிய போதிலும் அவரது மனைவியை காப்பாற்ற முடியவில்லை.

இந்த நிலையில், தமது மகளின் மரணம் சந்தேகத்திற்குரியது என பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து தனது மனைவியின் உடலை பெற்றுக்கொள்ள சில தினங்களாக முயற்சித்த இளைஞன் இரவு வீட்டுக்கு வந்து தனது குழந்தையை கட்டிப்பிடித்து அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.