டெங்கு நோயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 327 ஆக அதிகரிப்பு!!

525

டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டில் பலியானவர்களின் எணிணக்கை 327 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தொற்று நோய்த் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஆண்டின் கடந்த ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 15 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 வீதமானோர் 5 முதல் 19 வயது வரையான மாணவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.