அகுரஸ்ஸ – போரம்ப பிரதேசத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
வீதியால் சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் குளவித் தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
4 சிறுவர்கள் மற்றும் 8 பெண்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அகுரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





