குளவித் தாக்குதல்: 4 சிறுவர்கள், 8 பெண்கள் வைத்தியசாலையில்..!

580

kulaviஅகுரஸ்ஸ – போரம்ப பிரதேசத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

வீதியால் சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் குளவித் தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

4 சிறுவர்கள் மற்றும் 8 பெண்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அகுரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.