அனுஷ்காவுடன் காதல் இல்லை : பிரபாஸ்!!

439

நடிகை அனுஷ்­கா­வுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற்போதைக்கு திரு­மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறி­யுள்ளார்.

பல்­வேறு தெலுங்கு படங்­களில் நடித்­துள்ள நடிகர் பிரபாஸ், பாகு­பலி படத்­துக்குப் பிறகு, வெளி­நா­டு­க­ளிலும் பிர­ப­ல­மாகி விட்டார்.

தெலுங்கு, தமிழ், மலை­யாளம், இந்தி ஆகிய 4 மொழி­களில் தயா­ரா­கி­வரும் சாஹோ என்ற திரைப்­ப­டத்தில் தற்­போது நடித்து வரு­கிறார். இதற்­கி­டையில், இவ­ரது திரு­மணம் குறித்து பல வதந்­திகள் வந்த வண்ணம் உள்­ளன.

நடிகை அனுஷ்­கா­வுடன் காதல் என்றும், இவர்கள் இரு­வரும் விரைவில் திரு­மணம் செய்­து­கொள்ளப் போவ­தா­கவும் தகவல்கள் பரவி வரு­கின்றன.

அவர்கள் இரு­வரும் இத்­த­க­வல்­களை மறுக்­கா­ததால், ஒருவேளை உண்­மை­யாக இருக்குமோ என்ற சந்­தே­கமும் இருந்­தது.

இந்­நி­லையில், ஆங்­கில தொலைக்­காட்­சிக்கு பேட்­டி­யளித்துள்ள பிரபாஸ், தனது திரு­மணம் குறித்து முதன்­மு­றை­யாக பேசி­யுள்ளார்.

அவர் கூறி­ய­தா­வது: தற்­போது திரு­மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதனால் எனது ரசி­கைகள் மகிழ்ச்சி அடை­வார்கள் என நினைக்­கிறேன்.

திரு­மணம் குறித்து நான் நினைத்­துக்­கூட பார்க்­க­வில்லை. ஆனால் ஊட­கங்கள் என்­னையும், ஒரு நடி­கை­யையும் (அனுஷ்கா) இணைத்து செய்­தி­களை வெளி யிட்டு வரு­கின்­றன.

இதில் உண்மை இல்லை. முதலில் இது­போன்ற செய்­திகள் வந்தால் மனம் வருந்­துவேன். இப்­போது பழ­கிவிட் டது. 2 படங்­களில் தொடர்ந்து இணைந்து நடித்­ததால், மக்­களும், ஊட­கங்­களும் தவ­றாக புரிந்து கொள்­கின்­றன.

தற்­போது நடித்து வரும் ‘சாஹோ’ படத்தில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இவ்வாறு பிரபாஸ் கூறியுள்ளார்.