சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 13 பேர் உயிரிழப்பு!!

536

சீனாவின், சிச்சுவானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் பதிவாகிய 7 ரிக்டர் நில அதிர்வில் 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, நில நடுக்கத்தினால் காயமடைந்த மக்களுக்கான சிகிச்சைகளை வழங்கவும், பாதிப்படைந்த மக்களுக்கான நிவாரணங்களை துரித கதியில் வழங்குமாறும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தின் தாக்கத்திற்கு உட்பட்ட பொது மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாக சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஏனைய இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் அவதானத்துடன் செயற்படுமாறும் சி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் ஏனைய உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக சீன அமைச்சரவையினால், விசேட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.