கடந்த மாதம் 31ஆம் திகதி சாந்தசோலைப்பகுதி மக்கள் வவுனியா மாவட்ட செயகத்திற்கு சென்று தமது கிராமத்திலுள்ள அடிப்படைத் தேவைகள், குறிப்பாக வீட்டுத்திட்டம், வீதி, மின்சாரம் போன்ற தேவைகளை நிறைவேற்றித்தருமாறு கோரியிருந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு 11ஆம் திகதி சாந்தசோலை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு தேவைகளைப்பார்வையிடுவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று (11.08) மதியம் சாந்தசோலை பொதுநோக்கு மண்டபத்தில் அப்பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய அரசாங்க அதிபர் தலைமையில் சென்ற குழுவில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, நொச்சிமோட்டை கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் சென்று அப்பகு மக்களின் தேவைகளைக் கேட்டறிந்ததுடன், சாந்தசோலையில் 40 குடும்பங்களுக்கு வீடு பெற்றுத்தருமாறு பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர்.
இதயைடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதேச செயலாளர் உடனடியாக அப்பகுதி மக்களிடம் 40 குடும்பங்களுக்கும் பொருத்து வீடு பெற்றுக்கொடுப்பதற்கு சிபாரிசினை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
வீதி, மின்விளக்கு, வாழ்வாதாரம், பெண் தலைமைக் குடும்பங்கள், முன்ளாள் போராளிகள், போன்றவற்றின் விபரங்களையும் கேட்டறிந்த அரசாங்க அதிபர் தேவையான உதவிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தருவதாகவும் அதைக்கட்டம் கட்டமாகவே வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.















