தனது இறுதிப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார் உசைன் போல்ட்!!

532

 

உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில் ஆடவருக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் நடப்பு சம்பியனான ஜமைக்க அணி தோல்வியடைந்தது.

உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தசைப்பிடிப்பு காரணமாக தனது இறுதிப் போட்டியை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றார். 16 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைப்பெற்றுவருகிறது.

இதில் ஜமைக்கா ஜாம்பவான் உசைன் போல்ட், தனது கடைசி போட்டியான 4×100 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியின் தகுதி சுற்றில் தங்கள் அணிக்காக 3 ஆவது வீரராக ஓடினார்.

அப்போது அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக மைதானத்தில் சரிந்து வீழ்ந்தார் இதனால் ஜமைக்கா அணியால் போட்டியை நிறைவு செய்ய‌முடியவில்லை.‌ இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது‌. அமெரிக்கா இரண்டாவது இடமும், ஜப்பான் மூன்றாவது இடமும் பிடித்தன.