யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது நேற்று மாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பளைப்பகுதியில் வைத்து தனியார் பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்பட வில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.






