கொழும்பில் திறக்கப்படும் மிகப் பிரமாண்டமான ஹோட்டல்!!

631

 
கொழும்பு நகரின் காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சீனாவின் மிகப்பெரும் ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.

ஷங்கிரிலா ஹோட்டல் செயற்றிட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஹோட்டலில் அறைகளை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசியல் ரீதியாக மிகவும் விமர்சனத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பில் ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஷங்கிரிலா ஹோட்டலில் 500 அறைகள் உள்ளன. கொழும்பு நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய நீச்சல் தடாகம் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்வுகளுக்காக ஹோட்டலை ஒதுக்கிக் கொள்ள முடியும் எனவும், அங்கு 2000 பேர் அமர்வதற்கான வசதிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.