பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தடையில் எவ்வித மாற்றமும் இல்லை!!

472

பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தடை சம்பந்தமாக அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்தை முறையாக மற்றும் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னணியை வகுக்கும் பொறுப்பு சுற்றாடல் அதிகாரசபைக்கு காணப்படுவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

எஸ்பெஸ்டாஸ் மற்றும் புகையிலை தடை சம்பந்தமாக அரசாங்கம் செயற்படுகின்ற விதத்தில், சூழலை பேணுவதற்காக பாரிய சவாலான பொலிதீன் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற பரிசீலனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றியுள்ளார்.