இத்தாலியில் நிலநடுக்கம் : குலுங்கிய கட்டடங்கள்!!

544

 
இத்தாலியின் இச்சியா தீவில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கதால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அருகே நேப்லெஸ் கடலில் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்சியா தீவு பிரபல சுற்றுலா தலமாக உள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இச்சியா தீவுப்பகுதியில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

தேவாலயம் ஒன்று இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது. பலர் இதனால் காயமடைந்துள்ளனர். ஆனால் உயிர் சேதம் குறித்தான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இங்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 6க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

மருத்துவனையும் சேதமடைந்ததால், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 20 பேர் காயமடைந்துள்ளனர்.