ஹட்டன் – எபோட்சிலி தோட்டம், புளோரண்ஸ் பிரிவில் பழைய மாட்டுத்தொழுவம் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதுடன், இராமசாமி இராமஜெயம் எனும் 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாட்டுத் தொழுவம் உள்ள பகுதிக்கு நேற்று காலை சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து தொழுவத்தை திறந்து பார்க்கையில் அந்த நபர் சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து ஹற்றன் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த நபர், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு மிக நீண்ட காலமாக தனது சொந்த மாட்டுத் தொழுவத்தில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






