வட பகுதி உட்பட 9 மாவட்டங்களில் இன்று அடைமழை!!

391

நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளையும் அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஏனைய பகுதிகளின் வானம் மேக மூட்டத்தினால் நிறைந்து காணப்படும் எனவும், சப்ரகமுவ, மேல், தெற்கு மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும் மழை பெய்ய கூடும் எனவும் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.