சுவிஸ் மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய ஆட்டோ சாரதியின் பிணை மனு நிராகரிப்பு!!

1068

சுவிஸ் மாணவியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆட்டோ சாரதியின் பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்புகள் குறித்த ஆய்வொன்றுக்காக சுவிஸ் மாணவிகள் குழுவொன்று இலங்கை வந்திருந்தனர்.

அவர்களில் ஒரு மாணவி கடந்த ஜூலை மாதம் 26ம் திகதி அநுராதபுரத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்குச் சென்றிருந்த நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவரினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

குறித்த ஆட்டோ சாரதி சுவிஸ் மாணவியை இரண்டு நாட்கள் வரை பலவந்தமாக தடுத்து வைத்து வல்லுறவுக்குட்படுத்திய பின் நகரத்தில் கொண்டு வந்து ,இறக்கி விட்டுச் சென்றிருந்தார்.

எனினும் பொலிசார் கண்காணிப்புக் கமெராக்களின் உதவியுடன் முச்சக்கர வண்டிச் சாரதியைக் கண்டுபிடித்துக் கைது செய்திருந்தனர்.

தற்போதைக்கு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி சுவிஸ் திரும்பிச் சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டிச் சாரதி தனக்கு பிணை வழங்குமாறு கோரி முன்வைத்த மனுவை அநுராதபுரம் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மேலும் சந்தேக நபரின் மரபணு மாதிரியை கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஜீன்டெக் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது