கொரியா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

887

சீரற்ற காலநிலை காரணமாக கொரிய பரீட்சை எழுத முடியாமல் போனவர்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று தினம் ஒன்றை வழங்குவதற்கு கொரிய மனித வளம் பிரிவு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் http://www.slbfe.lk/ என்ற இணையத்தளத்திற்கு சென்று பரீட்சை எழுத தவறியவர்கள் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி கொரிய மொழி பரீட்சை கணினி மூலம் இடம்பெற்ற நிலையில் 22,882 பேர் அதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

உற்பத்தி பிரிவிற்கு 16,431 பேரும், மீன்பிடித் துறைக்கு 6457 பேரும் பரீட்சை எழுதவுள்ளனர்.