தன்னை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரை ஏமாற்றிய பாடசாலை மாணவி கைது!

1050

போலியான முறைப்பாட்டை செய்து பொலிஸாரை ஏமாற்றிய பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம பிரதேசத்தின் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தன்னை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், தன்னிடமிருந்த தங்கச் சங்கிலி மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக குறித்த மாணவியால் போலி முறைப்பாடு செய்யப்பட்டது.

எனினும் குறித்த மாணவியினால் திருடப்பட்டதாக கூறப்பட்ட தங்கச் சங்கலி, கையடக்க தொலைபேசி, மற்றும் இசைக் கருவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பகுதி நேர வகுப்பிற்கு செல்லும் போது குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்பட்டதில் இருந்து மூன்று நாட்களின் பின்னர் அந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் தன்னை கடத்தியவர்கள் யார் என தனக்கு தெரியாதெனவும் ஓரிடத்தில் வைத்து தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய செயற்பட்ட பொலிஸார் மாணவி கூறிய இடத்தில் உள்ள சீ.சீ.டீ.வி காணொளியை சோதனையிட்டுள்ளனர். எனினும் மாணவியால் கூறப்பட்ட விடயங்களை உறுதி செய்யப்படவில்லை.

இதன் காரணமாக மாணவியின் நண்பர்கள் சிலரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய அங்கு எவ்வித கடத்தல் சம்பவம் அல்லது, வகுப்புகள் நடத்தப்படவில்லை எனவும், தனது காதலனுடன் பயாகல கடற்கரைக்கும் சில இடங்களுக்கு அவர் சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய திருடப்பட்டதாக கூறப்பட்ட இசைக் கருவி மாணவியின் நண்பியின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காதலனின் அத்தையிடம் இருந்து தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், மாணவியின் தங்கச் சங்கிலி அலுமாரி ஆடைகளுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காதலனுடன் சென்ற பயணத்தை வீட்டில் மறைப்பதற்கே தான் இவ்வாறு போலி முறைப்பாடு செய்ததாக மாணவி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பொலிஸாரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் அந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.