வீட்டில் ஏற்பட்ட தகராற்றில் மனைவியைக் கொன்ற கணவன்!!

547

ஹம்பாந்தோட்டை – திமுத்துகல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராறு முற்றியத்தில் கணவன், தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். 27 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் கொலையை செய்த சந்தேகநபரை கைதுசெய்ய ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.