நாடளாவியரீதியில் செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வாரம்!

387

நாட­ளா­விய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. செப்­டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வார நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன. இதற்­கான விரி­வான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

முதல் நாளான  நாளை 18ம் திகதி திங்­கட்­கி­ழமை வீதி விபத்­துக்­களை தடுப்­ப­தற்­கான வேலைத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இரண்டாம் நாளான  19ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை வேலைத் தளங்­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

வீடு­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் வாரத்தின் மூன்றாம் நாளான 20ம் திகதி புதன்­கி­ழமை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. வியா­ழக்­கி­ழமை 21ம் திகதி நான்காம் நாள் முன்­பள்ளிப் பாட­சா­லை­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைக் தடுப்­ப­தற்­கான பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இறுதி நாள் 22ம் திகதி பாட­சாலை விபத்­துக்­களைக் தடுப்­ப­தற்­கான வேலைத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கையில் மணித்­தி­யா­லத்­திற்கு ஒருவர் என்ற ரீதியில், நாளொன்­றுக்கு 27 பேர் விபத்­துக்­களில் இறப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நாட்டில் பல்­வேறு விபத்­துக்­களின் மூலம் வரு­ட­மொன்­றிற்கு மொத்தம் 10 ஆயிரம் பேர் உயி­ரி­ழப்­ப­தாக சுகா­தாரம், போஷாக்கு, சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் டாக்டர் திலக் சிறி­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

மணித்தியாலத்துக்கு  480 பேர் என்ற விகிதத்தில் நாளொன்றுக்கு 11 ஆயிரம் பேர் விபத்துக்களில் சிக்கி சிகிச்சை பெறுவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.