வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : சாரதி தப்பியோட்டம்!

332

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி பகுதியில் இன்று (20.09.2017) அதிகாலை சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தினை வவுனியா விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி பகுதியில் பல லட்சம் பெறுமதியான முதிரைக்குற்றிகளை வாகனமோன்றி கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் குறித்த வாகனத்தினை விசேட அதிரடிப்படையினர் திறத்தி பிடிக்க முற்பட்டுள்ளனர். இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி புகையிரத பாதையில் வாகனத்தினை செலுத்திச் சென்ற சமயத்தில் வாகனம் புகையிரத பாதையின் அருகே குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலிருந்து வாகனத்தின் சாரதி தப்பிச்சென்றதுடன் வாகனத்தினையும் முதிரைக்குற்றிகளையும் மீட்கும் பணியில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.