நான் இவர்களால் தான் இறப்பேன் : மரணத்தை யூகித்த பிரித்தானிய பெண்ணின் கணிப்பு பலித்தது!!

523

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் எம்மா கெல்டி(43). தலைமை ஆசிரியையான இவர் உலகை சுற்றிப் பார்க்கும் ஆசையில் படகின் மூலம் கடல்வழியாக பயணம் செய்து வந்தார்.

இந்நிலையில், அவர் கடந்த 10-ஆம் திகதி தனது டுவிட்டர் பக்கத்தில் அமேசான் பகுதியில் எனது படகை பறித்துக் கொள்வார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்.. நல்லது என பதிவிட்டிருந்தார்.

அவரின் பதிவேற்றத்தை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் பிரேசில் நாட்டில் தற்போது கடல் பகுதியில் படகில் பயணம் செய்யும் வழியில் கடற்கொள்ளையர் கூட்டம், பயங்கரமான ஆயுதங்களுடன் நடமாடி வருவதால் தனது அச்சத்தை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது.

யூகித்தது போலவே, பிரேசில் நாட்டில் உள்ள தீவுப் பகுதியான லாரோ சோட்ரே பகுதியில் அவரது படகை வழிமறித்த வாட்டர் ரேட்ஸ் எனும் கடற்கொள்ளையர்கள், எம்மா கெல்டியை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அவரது செல்போன், டப்லட், கணனி மற்றும் அதிநவீன கமரா ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக 17 வயது கொள்ளையனை பிரேசில் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.