எனது இதயமே நின்றுவிட்டது : அமிதாப் பச்சன்!!

930

amirtap

டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவது குறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாவது..

டெண்டுல்கர் 200வது டெஸ்டோடு ஓய்வு முடிவை அறிவித்த செய்தியை கேட்டது என் இதய துடிப்பு நின்றுவிட்டதாக உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயதுடிப்பு நின்றுவிட்டது. அவரது செயல்பாட்டை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.

அவருக்கு என்றும் தனி சிறப்புடன் ஆடியவர். இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம். விளையாட்டில் இருந்து அவரது ஓய்வு பெறும் கற்பனை தான். ஏனென்றால் அவர் இல்லாத கிரிக்கெட்டை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

நாட்டுக்காக அவர் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அவர் சாதனைகள் எல்லாம் நம்பமுடியாதவை. அவருக்கு எனது சிறந்த பாராட்டு என்று கூறினார்.