பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல்!!

819

தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளித்த கவர்ச்சி நடிகை ஜோதி மீனா அந்த புகாரை உடனடியாக திரும்ப பெற்றுள்ளார்.

சென்னை பாண்டிபஜார் பொலிஸ் நிலையத்தில் ஜோதிமீனா பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில், என்னுடைய வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில் ராகுல், நவீன், பிரவீன் ஆகிய 3 பேர் புகுந்தனர், அவர்கள் என்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

நான் பணம் தர மறுத்துவிட்டேன், இதனால் அவர்கள் என்னை தாக்கினர், மேலும் என்னையும், எனது மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்று விட்டனர் என்று கூறியிருந்தார்.

ஜோதிமீனாவுக்கு 3 பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது, இந்தநிலையில் தான் அளித்த புகார் மனுவை ஜோதிமீனா உடனடியாக திரும்ப பெற்றுவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.