வீதியில் ஐஸ்கிரிம் விற்று வளர்த்த மகன் தற்கொலை : வேதனையில் தாய்!!

616

 
தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகர் தசுன் நிஷாந்தவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக கம்பஹா மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதி நடவடிக்கைகள் மல்வத்தை மயானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த நடிகரின் தாயார் கண்ணீருடன் கருத்து வெளியிட்டிருந்தார்.

தினமும் ஹோமாகம வில்ப்ரட் மைதானத்திற்கு அருகில் ஐஸ்கிரிம் விற்று இதுவரை எனது மகனை வளர்த்தேன். எனது மகன் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் கல்வி கற்றுள்ளார். அவருக்கு இன்னுமொரு சகோதரர் உள்ளார்.

எனது கணவர் இரண்டாவது மகனுக்கு இரண்டரை வயதாகும் போது எங்கள் அனைவரையும் கைவிட்டு கனடாவுக்கு சென்று விட்டார். அன்று முதல் எனது பிள்ளைகளை நானே வளர்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாங்க முடியாத மனவிரக்தி காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தான் தங்கியிருந்த அறையினுள் தசுன் நிஷாந்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.