சொர்க்கத்தை அடைவதற்கு இரண்டு வயது குழந்தை எரித்து கொலை : தாய் அளித்த பகீர் வாக்கு மூலம்!!

576

பெல்ஜியத்தில் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக பெற்ற குழந்தையை அவரது தாயே எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியத்தின் தலைநகரான Brussels பகுதியில் உள்ள Zemst என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெறும் புகையாக வருவதாக அருகில் இருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் பொலிசார் குறித்த வீட்டை அடைந்து வீட்டிற்குள் பொலிசார் சென்ற போது அதிர்ச்சியடைந்தானர். அங்கு வீட்டின் பின் புறம் வாகனம் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் 2 வயது பெண் குழந்தை ஒருவர் இறைச்சியை வாட்டும் பார்பிக்யு கம்பியில் உயிருடன் எரிக்கப்பட்ட நிலையில் கருகி இருந்துள்ளது.

இதனால் பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அந்த இரண்டு வயது குழந்தையை எரித்ததே அவரது 27 வயது சொந்த தாய் தான் என்றும் சில காரணங்களுக்காக தற்போதைக்கு பெயர் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பெண் கூறுகையில், சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக குழந்தையை அப்படி செய்ததாகவும், அதன் பின் தானும் உயிரை மாய்த்து கொள்வதற்கு தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ள நிலையில், அவருக்கு மனநிலை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். அதன் பின்னரே முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.