
பலாங்கொடை வெலங்கே பிரதேசத்தில் அதிகளவில் மக்கள் பேய் பீதியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை காரணமாக மக்கள் இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.
பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் பீதியடைந்துள்ளனர். கறுமையான உயர்ந்த வயோதிப உருவமொன்று மக்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உருவத்தை நேரில் பார்த்து பயந்த பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இரவு வேளைகளில் திடீரெனத் தோன்றும் இந்த உருவம் திடீரென மறைந்து விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பேய் பீதியைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.





