காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

520

பொலன்நறுவை – வெலிகந்தை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் ரிதிதென்ன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இந்த நபர் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்குதல் நடந்த இடம் மாதுருஓயா மற்றும் சோமாவதி தேசிய வானங்களுக்கு யானைகள் சென்று வரும் பாதை என தெரியவந்துள்ளது.