ஈழக் கனவை நனவாக்க படிப்படியாக முன்னேறுகிறது கூட்டமைப்பு : முஸாம்மில்!!

290

mussamil

புதிய ஈழத் திட்டம் படிமுறை படிமுறையாக முன்னோக்கிச் செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் கண்டுபிடித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தனது கண்டுபிடிப்பு பற்றி கருத்து வெளியிட்டார்.

பிரிவினைவாத அதிகாரத்துடன் வடக்கு ஆட்சியை கைப்பற்றிய கூட்டமைப்பு ஈழக் கனவை நனவாக்கிக் கொள்ளவென செயற்படுகிறது.

அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கை தற்போது பிரிந்து இருக்கும் வடக்கு, கிழக்கை ஒன்றிணைப்பதாகும். இதனை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.

உள்நாட்டில் சுயாட்சி வழங்கப்படாவிட்டால் சர்வதேச ஆதரவுடன் அதனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனவே கூட்டமைப்பினர் தமது இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேறிச் செல்கின்றனர். இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார்.