ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நாடாளாவிய ரீதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களில் கலந்து கொள்கின்றார்.
அந்த வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், இதன் பின்னர் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறு விஜயம் செய்யும் அவர் அங்கு பல்வேறு மக்களையும் சந்தித்து கலந்துரையாடுகின்ற நிலையில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம் அளவளாவி மகிழ்வடையும் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன.
நாட்டின் ஜனாதிபதியாக பல பொறுப்புக்களை கொண்டுள்ள ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது மைத்திரியின் இன்னொரு முகத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.