நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்புக்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் அதேவேளை பலமான காற்றும் வீசும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
காலநிலை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கும் அதேவேளை கடலுக்குச் செல்வோர் எச்சரிக்கையாக செயற்படுமாறும் அந்நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.





