வடகொரியா தொடர்பில் அமெரிக்கா எடுத்த கடும் நடவடிக்கை!!

744

பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகளின் பட்டியலில் வட கொரியாவை இணைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடுமையான பொருளாதார தடைகள், உலகளாவிய எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் வடகொரியா, தனது அணு ஆயுத திட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

வடகொரியா 6வது முறையாக அணுக்குண்டு சோதனை நடத்தி முடித்திருப்பதுடன், தற்போது அமெரிக்காவின் உள்பகுதியை தாக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை யுத்தம் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகளின் பட்டியலில் வட கொரியாவை இணைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இதை நீண்ட காலத்துக்கு முன்பாக செய்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இந்த பட்டியலில் வடகொரியா முன்பும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் 2008 ஆம் ஆண்டு, ஜார்ஜ் டபிள்யு புஷ் ஜனாதிபதியாக இருந்தபோது அந்தப் பட்டியலில் இருந்து வடகொரியா விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அந்த நாட்டை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகளின் பட்டியலில் டிரம்ப் சேர்த்திருப்பது, உலக அரங்கை அதிரச்செய்துள்ளது.

இதன் காரணமாக வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். டிரம்பின் நடவடிக்கை காரணமாக வடகொரியா உலகளவில் பிற நாடுகளிடம் இருந்து தூதரக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதேவேளை, அமெரிக்கா மீது வடகொரியா கடும் ஆத்திரம் கொள்ளவும் இந்த முடிவு வழிவகுக்கிறது என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.