அரச பேரூந்துடன் மோதிய 30 வயது ஆசியரியர் பலி!!

513

 
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டக்கொடை கீழ்பிரிவு தோட்ட அருகாமையில் இன்று (01) காலை 9.30 மணிளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஓருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புஸ்ஸல்லாவ நவகடதுர பகுதியைச் சேர்ந்தவரும் நுவரெலியா பெயின்டர் சிங்கள பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வரும் முத்திக்க சமிந்த ஹெட்டிகெதர (வயது 30) என்பவராவார்.

குறித்த இளைஞர் 1.12.2017 காலை தனது மோட்டார் சைக்கிளில் புஸ்ஸல்லாவ பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்துக்கொண்டிருந்த வேளை, தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த அரச பேருந்தில் மோதி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அரச பேருந்தின் சாரதியை கைதுசெய்துள்ள தலவாக்கலை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.