கடமைக்கு வராத ரயில்வே ஊழியர்களுக்கு சிக்கல்!!

531

கடமைகளுக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களின் பதவி வெற்றிடமாகவுள்ளதாக, கருதப்படும் என, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், இணக்கப்பாடு எட்டப்படாமையால், தொடர்ந்தும் அப் போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.