நாடு முழுவதும் 45 ஆயிரம் பாலியல் தொழிலாளிகள்!!

1090

நாடு முழுவதும் 45 ஆயிரம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக குருணாகல் வைத்தியசாலையின் எயிட்ஸ் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் சிறப்பு மருத்துவ நிபுணர் எச்.ஏ.சி.டப்ளியூ.ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண்கள் தினமும் மூன்று இலட்சம் ஆண்களுக்கு தமது சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச எயிட்ஸ் நோய் தினத்தை முன்னிட்டு குருணாகல் பௌத்த இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது சுமார் 25 ஆயிரம் ஓரினச் சேர்கையாளர்கள் இருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை 2 ஆயிரத்து 600 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது பாலியல் சார்ந்த நோய்கள் தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.