மர்மக்கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது : தடயப்பொருட்களும் மீட்பு : பொலிஸார் அதிரடி!!

439

 
மன்னார், பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில்உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைபேசாலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சான்றுபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வர்த்தக நிலையம் ஒன்றில் உயிரிழந்தஇளைஞனுடன் வேலை செய்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் பேசாலையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது 29) என்னும் இளைஞர் கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் அவரின் வீட்டில் உயிரிழந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞனின் மர்ம மரணம் தொடர்பில் உறவினர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்திருந்தனர்.இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. குறித்த சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மரணத்தில் சந்தேகம் கொண்டுசட்ட வைத்திய நிபுணரின் பார்வைக்கு சிபார்சு செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் குறித்தசடலத்தினை உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டார். இதன் போது கயிற்றை ஒத்த ஓர் பொருளினால் கழுத்து நெரித்தே கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் தென்படுவதாக சட்ட வைத்திய நிபுணர்தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வந்தநிலையில் சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம்செய்யப்பட்டுள்ளது.

குறித்த மரணம் கொலை என தெரியவந்த நிலையில் பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளைமேற்கொண்டு வந்தனர்.

பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டீ.எம்.சிறில் தலைமையில் விசேட பொலிஸ்குழுவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த இரகசிய விசாரணையின் போது மர்மமானமுறையில் உயிரிழந்த குறித்த இளைஞனுடன் ஒரே வர்த்தக நிலையத்தில் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை தலைமன்னார் பியர் றிஸாட் சிட்டிபகுதியில் உள்ள வீட்டில் வைத்து 24 வயதுடைய இளைஞன் ஒருவரை கைதுசெய்ததோடு, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்தியதடயப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொலை இடம் பெற்ற நேரத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தின்போது இறந்த இளைஞனின் உடலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வெளி வந்த இரத்தம் கொலைசெய்ததாக கூறப்படும் சந்தேகநபரான கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் அன்றையதினம் அணிந்திருந்த உடையிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் போது குறித்தஉடையும் சான்றுப்பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த இளைஞனை கழுத்து நெரித்து கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாககருதப்படும் பொதிகள் கட்டும் துணி கயிற்றையும், சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமன்னார் – பேசாலை வீதியின் அருகே உள்ள பற்றைக்குள் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேசாலை ஆலய திருவிழாவாக இருந்தமையால் சம்பவத்துக்குமுதல் நாள் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு வரை குறித்த வர்த்தகநிலையத்தில் வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரே உயிரிழந்த இளைஞனை அவரின்வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

இறந்த இளைஞனின் வீட்டில் தாயும் இறந்த குறித்த இளைஞனுமே வாழ்ந்துவந்துள்ளனர். குறித்த இளைஞனின் தாய் அன்றைய தினம் கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மட்டுமே தனிமையில் இருந்த நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகுறித்த நபர் கொலையினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனுக்கும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்குமிடையே சில தினங்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளதாகபொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பேசாலைபொலிஸார் குறித்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை(15.12) மன்னார் நீதிமன்றத்தில் மாவட்டநீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதிவெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பேசாலையில் இடம் பெற்ற குறித்த இளைஞனின் மர்ம மரணம் மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.