வவுனியாவில் கடையுடைத்து திருட்டு!!

687

 
வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தினை நேற்றிரவு (19.12.2017) உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு வழமை போன்று இரவு 9.20 மணியளவில் வர்த்தக நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். இன்று காலை 7.20 மணியளவில் வர்த்தக நிலையத்தினை திறக்கச் சென்ற சமயத்தில் வர்த்தக நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்து பணம், பொருட்கள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தில் உரிமையாளர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.