தாயின் உயிரை காக்க கண்ணீருடன் உதவிக் கரம் நீட்டும் மகள்!!

508

 
சுவாசப்பையில் ஏற்பட்டுள்ள நோயினால் செயற்கை சுவாசத்தில் வாழும் தனது தாய்க்கு செயற்கை சுவாச இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு உதவுமாறு அந்த தாயின் மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹட்டன் டிக்கோயா தோட்டத்தை சேர்ந்த ரூபாசாமி ஸ்ரீயானி என்பவரே இவ்வாறு உதவியை நாடியுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயாரான 62 வயதுடைய மொரின் ராஜேந்திரி, கடந்த நான்கு மாத காலமாக சுவாசப்பையில் ஏற்பட்டுள்ள நோயினால் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு செயற்கை சுவாச இயந்திரத்தினால் சுவாசம் வழங்கப்படுகின்றது. இதனால் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த தாயிற்கு செயற்கை சுவாச இயந்திரம் ஒன்றை பெற்றுக்கொடுக்க முன் வந்தால் அவர் தனது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் வாழ முடியும் என்று குறித்த தாயின் மகள் கண்ணீருடன் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.