பேஸ்புக்கால் நேர்ந்த கதி!!

569

facebook-fake-profileபேஸ்புக் மூலம் தவறான முகவரிகளை உருவாக்கி பெண் போலவே சில ஆண்கள் போலி அடையாளம் தயாரித்து சபலம் பிடித்த ஆண்களை வலையில் வீழ்த்தி முடிந்தவரை சுருட்டுவது என்பது தற்போது அதிகரித்து வருகிறது.

டெல்லியில் மற்றுமொரு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்துவரும் மாணவர் ஒருவருக்கே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேஸ்புக் வைத்துள்ள இவர் திவ்யா என்ற ஒரு பெண்ணிடமிருந்து நட்பு வேண்டுகோள் கிடைக்க அதனை ஏற்றார். இருவரும் சிறிது காலம் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

திவ்யா என்ற அந்தப் பெயர் தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவுடன் மனிதருக்கு தலைகால் புரியவில்லை. சரோஜினி நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூட பகுதியில் திவ்யாவை சந்திக்க இந்த நபர் புறப்பட்டுச் சென்றார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற அந்த மாணவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு திவ்யாவும் இல்லை ஒருவரும் இல்லை. மாறாக 4 வாலிபர்கள் தடதடவென வேனில் வந்து இவரை பிடித்து வசைமாரி பொழிந்து 1000 ரூபாய் பணம் கையடக்க தொலைபெசி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு சென்றனர். பொலிசில் புகார் கொடுத்த நபர் இப்போது திருதிருவென விழித்துக் கொண்டு காத்திருக்கிறார்.