காதல் விவகாரத்தில் மோதல் : ஒருவர் கொலை!!

478

இரத்தோட்டை – எலகலவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பு காரணமாக இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியானவர் 46 வயதான ஒருவராகும். அத்துடன், 27 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.