யாழ் மாணவன் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்!!

776

தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் கணிதப் பிரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்.பெற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த போல் ஜனாசன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் ஆங்கில மொழிமூலத்தில் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.