எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள்!!

517
இலங்கையில் பண்டிகை மற்றும் விடுமுறைக்காலத்தினை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்பவர்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள் நடத்தப்படவுள்ளன.

பாடசாலை விடுமுறைக்காலம் எதிர்வரும் இரண்டாம் திகதியுடன் நிறைவடையும் போதும், ஜனவரி ஏழாம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த தகவலை புகையிரத கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளதுடன், புதுவருடத்தினை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்பவர்களை மகிழ்விக்கும் வகையிலும், போக்குவரத்தின்போதான சிரமங்களை குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிகளுக்கு செல்வோருக்கான விசேட புகையிரத சேவையும் கொழும்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]